Alice in Wonderland story in Tamil || Tamil bedtime Stories

Alice's Adventures in Wonderland Story in Tamil for kids

Tamil Bedtime stories for kids

ஆலிஸின் அற்புத  உலகம்

Down the Rabbit Hole


Alice in Wonderland Story in Tamil - Down the Rabbit Hole


அது ஒரு கோடை காலம். ஆலிஸ்சும் அவள் சகோதரியும் ஒரு ஆற்றங்கரை ஓரம் உட்கார்ந்திருந்தனர். ஆலிஸின் சகோதரி புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்த ஆலிஸ்க்கு சலிப்பு ஏற்பட்டது. 

அப்போது திடீரென்று இளஞ்சிவப்பு கண்களையுடைய ஒரு வெள்ளை முயல் விரைந்து வருவதை பார்த்தாள்.
அந்த வெள்ளை முயல் நீல நிற கோட் அணிந்திருந்தது. தன்னுடைய கோட் பாக்கெட்டில் இருந்து பெரிய கைக்கடிகாரத்தை எடுத்து "ஓ அன்பே! நான் மிகவும் தாமதமாகி விட்டேன்!" 
என்று கூறி மிகவும் வேகமாக ஓடியது.

அந்த முயல் பேசுவதைக் கண்ட ஆலிஸ், ஆச்சரியப்பட்டாள். உடனே அந்த முயலை பின் தொடர்ந்தாள் ஆலிஸ்.
அந்த முயல் திடீரென்று ஒரு பெரிய குழியில் கீழே விழுந்தது. அதனைக் கண்ட ஆலிஸ் அந்த குழியில் குதித்தாள். " நான் இப்போது எங்கு இருக்கிறேன்? ஒருவேளை பூமியின் மறுபக்கத்திற்கு செல்கிறேனோ?" என்றாள் ஆலிஸ்.

ஒருவழியாக ஆலிஸ் இலைகளின் குவியலின் மேல் விழுந்தாள். அவள் அந்த இடத்தை அங்குமிங்கும் பார்த்தாள். அப்போது மறுபடியும் அந்த முயலை கண்டாள் ஆலிஸ். அந்த முயல் முணுமுணுத்து கொண்டே அங்கிருந்து வேகமாக ஓடியது. மறுபடியும் அந்த முயலை பின்தொடர்ந்தாள் ஆலிஸ்.

ஆலிஸ் இரண்டு பக்கமும் சூழ்ந்துள்ள கதவுகளால் ஆன நீண்ட நடைபாதையை நெருங்கினாள். இந்த கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன. அங்கிருந்த கண்ணாடி மேசையில் ஒரு தங்க சாவி இருப்பதை அலிஸ் பார்த்தாள். அந்த சாவியை வைத்து கதவைத் திறக்க முயல்கிறாள், ஆனால் முடியவில்லை. பிறகு ஆலிஸ் ஒரு  திரைக்கு பின்னால் ஒரு  சிறிய கதவு இருப்பதை காண்கிறாள். அந்தக் கதவு மிகவும் சிறியதாக இருந்தது. அதனைத் திறந்து பார்க்கும் போது ஒரு அழகான பூக்கள் நிறைந்த தோட்டம் இருந்தது. 

ஆலிஸ் உள்ளே செல்வதற்கு அந்த கதவு மிகவும் சிறியதாக இருந்ததால், அவளுக்கு உதவும் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிக்க அந்த அறையில் நோட்டம் விடுகிறாள். அப்போது"என்னை குடி" என்று குறிக்கப்பட்ட ஒரு பாட்டில் மேசையில் இருந்தது. அதனை குடித்த உடன் ஆலிஸ் உயரம் குறைந்து சுருங்கினாள். அவள் இப்போது கதவு வழியாக செல்ல முடியும் என்றாலும், அவள் சாவியை மேசையின் மேல் வைத்துவிட்டு சென்றதை உணர்கிறாள்.

அவள் அழத் தொடங்கினாள், அப்போது  மேசைக்கு அடியில் ஒரு சிறிய கண்ணாடிபெட்டியில் 'என்னை சாப்பிடுங்கள்' என்ற வார்த்தைகள் குறிக்கப்பட்ட ஒரு சிறிய கேக் இருந்தது. இந்த கேக் அவளை வளர அல்லது சுருங்கவைக்கும் என்ற நம்பிக்கையுடன், அவள் அதை சாப்பிடுகிறாள்.ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று ஏமாற்றம் அடைந்தாள்.


Chapter 2 - The pool of tears

"என்னை சாப்பிடு" என்று குறிக்கப்பட்டிருந்த கேக்கை ஆலீஸ் சாப்பிட்டாள். அதனை சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்திலேயே ஆலிஸ் வளரத் தொடங்கினாள். அவளால் தன் பாதத்தை கூட பார்க்க முடியவில்லை அந்த அளவுக்கு அவள் உயரமானாள்.

அதுமட்டுமல்லாமல் அவளுடைய தலை மேற்கூரையில் இடித்தது.


ஆலிஸ் அந்த சிறிய கதவை திறந்து பார்க்கிறாள். அவள் உயரமாக இருந்ததால் அவளால் அந்தக் கதவு வழியாக உள்ளே செல்ல முடியாத நிலை. அவள் அழத்தொடங்கினாள். அவளுடைய கண்ணீர் அந்த அறையை குளம்போல தேங்கி நின்றடையச் செய்தது.

அப்போது மறுபடியும் அந்த வெள்ளை முயல் நேர்த்தியாக உடை மற்றும் அதன் கைகளில் வெள்ளை கையுறைகளை அணிந்து மண்டபத்தின் வழியாக விரைந்தது. "ஓ! டச்செஸ் !! நான் மிகவும் தாமதமாகி விட்டேன்! அவர் எனக்காக காத்திருப்பார்" என்று முணுமுணுத்துக் கொண்டே அந்த முயல் வேகமாக விரைந்தது.

ஆலிஸ் அந்த முயலிடம் தனக்கு உதவுமாறு கேட்கிறாள். ஆனால் அந்த முயலோ தான் கையில் அணிந்திருந்த கையுறைகள் மற்றும் விசிறியை கீழே போட்டுவிட்டு வேகமாக முணுமுணுத்துக் கொண்டே ஓடியது. ஆலிஸ் அந்த முயலின் மீது கோபம் கொண்டாள்.


அந்த முயல் விட்டுச்சென்ற விசிறியை எடுத்து விசிற தொடங்கினாள். தான் மறுபடியும் உயரம் குறைந்து சுருங்க தொடங்கினாள் ஆலிஸ். அவள் முன்பு இருந்த உயரத்தை விட மிகச் சிறியதாக மாறினாள். அங்கிருந்த சிறிய கதவை நோக்கி நகர்ந்தாள் ஆலிஸ். அப்போது அவள் தவறி குளம்போல் தேங்கியிருந்த உப்புத் தண்ணீரில் விழுந்தாள். ஆலிஸ் விழுந்து தத்தளிக்கும் உப்புத்தண்ணீர் அவள் வடித்த கண்ணீர் என்று உணரத் தொடங்கினாள். 

அந்த குளத்தில் ஆலிஸ் ஒரு எலியை பார்க்கிறாள். அவள் அந்த எலியிடம் உரையாட முயற்சிக்கிறாள். அவள் பூனை டைனா, மற்றும்  நாய்களை பற்றிப் பேசியதால் அந்த எலி கோபப்பட்டு அங்கிருந்து நீந்திச் சென்றது. மேலும் பூனைகள் மற்றும் நாய்கள் பற்றி விவாதிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தால் நான் உனக்கு உதவுகிறேன் என்று அந்த எலி ஆலிஸ்க்கு நிபந்தனை விடுத்தது. ஆலிஸ் அந்த நிபந்தனையை ஏற்றாள். ஆலிஸ் மற்றும் அந்த எலியும் கரையை திரும்பினர்.

A Caucus race

ஆலிஸும் மற்ற உயிரினங்களும் அங்கிருந்து நீந்தி கரைக்கு வந்தனர். அவர்கள் ஈரமாக இருந்ததால் அதனை எப்படி உலர வைப்பது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எலி தனக்கு தெரிந்த வில்லியம் தி கான்குரர் (William the conqueror) என்பவரின் வரலாற்றுக் கதையை சொல்லி அனைவரையும் சலிப்படைய செய்தது. கதையை சொல்லி முடித்த பிறகும் ஆலிஸும் மற்ற விலங்குகளும் ஈரமாகவே இருந்தன.

டோடோ, ஒரு காக்கஸ் பந்தயம் வைக்கலாம் என்று பரிந்துரைத்தது.

ஆலிஸும் மற்ற விலங்குகளும் வட்டமாக நின்று போட்டியில் ஓட தொடங்கினர். போட்டி ஆரம்பித்த அரைமணி நேரத்திற்கு பிறகு அனைவரும் உலர்ந்தனர். டோடோ, அனைவரையும் இந்த போட்டியின் வெற்றியாளர்கள் என்று அறிவித்தது.

வெற்றியாளர்களுக்கு பரிசு கொடுக்கும் பொறுப்பை டோடோ ஆலிஸுக்கு வழங்கியது. 

ஆலிஸ் தன்னிடமிருந்த மிட்டாய்களை அனைவருக்கும் வழங்கினாள். அப்போது மற்ற விலங்குகள் ஆலிஸுக்கும் பரிசு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். டோடோ ஆலிஸுக்கு ஒரு விரல்சிமிழை பரிசளித்தது. எல்லா விலங்குகளும் இனிப்புகளை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

The Rabbit sends in a little Bill

வெள்ளை முயல் ஆலிஸ் இருக்கும் இடத்திற்கு விரைந்தது. தான் விட்டுச் சென்ற விசிறி மற்றும் கையுறைகளை தேடியது. வெள்ளை முயல் தனது வீட்டிற்குச் சென்று தன்னுடைய பொருட்களை எடுத்து வருமாறு அலிஸிடம் கட்டளையிட்டது. ஆலிஸும் முயல் காட்டிய வீட்டிற்குச் சென்றாள்.

அந்த வீட்டில் ஒரு மேஜையில் விசிறி, கையுறைகள் மற்றும் ஒரு சிறிய பாட்டில் இருப்பதை காண்கிறாள்.

அந்த பாட்டிலை பார்த்தவுடன் ஆலிஸ் அதனை ஆர்வத்துடன் குடித்தாள். அதனை குடித்து முடித்த உடனேயே அவள் வேகமாக வளரத் தொடங்கினாள். அவளுடைய உருவம் பெரியதாகியதால் அந்த வீட்டைவிட்டு அவளால் வெளியே வர இயலவில்லை. அவள் அந்த அறைக்குள் மாட்டிக் கொண்டாள்.

முயல் ஆலிஸுக்காக காத்துக்கொண்டிருந்தது. வெகு நேரம் ஆகியும் ஆலிஸ் வராததால் முயல் அந்த வீட்டிற்கு சென்றது. கதவை திறக்க முயன்றது. ஆனால் ஆலிஸின் ராட்சத கை கதவை திறக்க தடுக்கிறது. முயலும் மற்ற விலங்குகளும் ஒன்றாகக் கூடி ஒரு திட்டத்தை தீட்டின. அந்த கூட்டத்தில் இருந்த விலங்குகளில் மிகச் சிறிய விலங்கான "பில்" என்னும் பல்லியை வீட்டின் புகைபோக்கி வழியாக கீழே இறக்க முயற்சித்தனர். ஆனால் ஆலிஸின் ராட்சத கால் அந்த பல்லியை எட்டி உதைத்து வெளியே சென்று விழச் செய்தது.

பிறகு முயல் வேறு ஒரு திட்டத்தை வகுத்தது. கீழே இருக்கும் கூழாங்கற்களை வீட்டின் ஜன்னல் வழியாக அனைத்து விலங்குகளும் வீசத் தொடங்கினர். அந்த கூழாங்கற்கள் கேக்காக மாறியது. இந்த கேக்குகள் என் உருவத்தை நிச்சயம் மாற்றும் என்று எண்ணி ஆலிஸ் நம்பிக்கையுடன் அந்த கேக்குகளை சாப்பிட்டாள். அதனை சாப்பிட்டு முடித்த பிறகு மறுபடியும் ஆலிஸ் உயரம் குறைந்து சுருங்கினாள். உடனடியாக அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.

Advice from a Caterpillar

ஆலிஸ் அந்த வீட்டை விட்டு தப்பித்து காட்டிற்குள் வந்தாள். அங்கு ஒரு பெரிய கம்பளிப்பூச்சி காளான் மேல் அமர்ந்துகொண்டு ஹுக்காஹ் புகை பிடித்துக் கொண்டிருந்தது. ஆலிஸ் அந்த கம்பளிப்பூச்சியை உற்று கவனிக்கிறாள். அந்தக் கம்பளிப்பூச்சி ஆலிஸை பார்த்து "நீ யார்?" என்று கேட்டது. ஆலிஸ் தான் யார் என்பதைப்பற்றி புரிய வைக்க சிரமப்பட்டு, அங்கிருந்து விரக்தியுடன் வெளியே செல்ல முயற்சிக்கிறாள். ஆனால் அந்த கம்பளிப்பூச்சி அவளை அழைத்து ஒரு கவிதையை பாட சொல்கிறது. 


ஆலிஸும் "Father William" என்ற கவிதையை பாடத் தொடங்கினாள். அந்தக் கம்பளிப்பூச்சி ஆலிஸ் தவறாக பாடுவதை கண்டுபிடிக்கிறது. அவளிடம் சென்று நீ எந்த உயரத்தில் இருக்க விரும்புகிறாய் என்று கேட்டது. அதற்கு ஆலிஸ்  "நான் உயரமாக  வேண்டும்" என்று கூறினாள்.


அதற்கு அந்தக் கம்பளிப்பூச்சி, ஒரு காளானை கொடுத்து,  "இந்த காளானின் ஒரு பக்கம் உன்னை உயரமாக வளர செய்யும்; மறுபக்கம் சாப்பிடும்போது உன்னை சிறியதாக்கிவிடும்" என்று ஆலிஸிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றது.
ஆலிஸ் காளானின் ஒரு பக்கத்தை சாப்பிட்ட பிறகு உயரம் குறைந்து சுருங்கினாள். பிறகு, காளானின் மறுபக்கத்தை சாப்பிட்டாள். அப்போது அவளது கழுத்து ஒட்டகச்சிவிங்கி போல நீளமாக வளர்ந்தது. அப்போது அங்கிருந்த ஒரு புறா ஆலிஸை பாம்பு என்று நினைத்து தாக்க முயன்றது. ஆலிஸ், தான் ஒரு பாம்பு அல்ல என்று உறுதி அளக்கிறாள். அதன்பின்பு அந்தப் புறா அதன் கூட்டிற்கு சென்றது. ஆலிஸ் தனது சரியான உயரம் வரும்வரை காளானின் வலது பக்கமும் இடது பக்கமும் மாற்றி மாற்றி சாப்பிட்டாள். 

ஒருவழியாக அவள் சரியான உயரம் அடைந்தாள். மீதமுள்ள காளானை பின்பு உதவும் என்று கருதி,  அவள் பத்திரமாக வைத்துக்கொண்டாள். அவள் அந்த காட்டை விட்டு ஓடினாள்.

Pig and the Pepper

காட்டிலிருந்து நடந்து வரும்போது ஆலிஸ் ஒரு வீட்டை பார்க்கிறாள். அங்கு ஒரு மீன் சேவகன் போல உடை அணிந்து அந்த வீட்டின் கதவை தட்டியது. அந்தக் கதவை பணியாளர் போல உடை அணிந்த ஒரு தவளை அந்தக் கதவை திறந்தது.  ராணியுடன் குரோக்கெட் விளையாட டச்சசை அழைக்கும் கடிதத்தை அந்த மீன் சேவகன் தவளை சேவகனிடம் கொடுத்தது. மீன் சேவகன் அங்கிருந்து போனபின்பு, தவளை சேவகன் கீழே அமர்ந்து வானத்தைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தது. 

ஆலிஸ் பணியாளர் போல உடை அணிந்திருந்த அந்த தவளையிடம் நெருங்கியது. அந்த வீட்டின் கதவை தட்டியது. அந்த பணியாளர் போல உடை அணிந்திருந்த தவளை, கதவைத் தட்டுவதால் ஒரு பயனும் இல்லை என்று ஆலிஸிடம் கூறியது. வீட்டின் உள்ளே டமால் டுமீல் என்று பயங்கரமான சத்தம் வெளியே கேட்டது. "நான் இந்த வீட்டின் உள்ளே செல்ல வேண்டும். எப்படியாவது உதவி செய்யுங்கள்" என்று தவளை ஆலிஸ் வேண்டியது. அப்போது திடீரென்று அந்த கதவு திறந்தது. ஒரு பெரிய தட்டு பறந்து வந்து தவளை சேவகனின் தலையில் விழுந்தது. அப்போது ஆலிஸ் அந்த வீட்டின் சமையல் அறை உள்ளே சென்று பார்த்தாள். 

அங்கு டச்சஸ் குழந்தையை கவனித்துக் கொண்டிருப்பதையும், ஒரு சிரிக்கும் பூனை அடுப்பங்கரை யோரம் அமர்ந்திருப்பதையும், சமையற்காரி மிளகு தூக்கலாக ஒரு சூப் செய்து கொண்டிருப்பதையும் கவனித்தாள். அந்த சமையல்காரி மிளகு அதிகம் கொட்டுவதால் டச்சஸுக்கும் அந்தக் குழந்தைக்கும் தும்மல் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த சமையல்காரிக்கு மட்டும் தும்பல் வரவில்லை.

 ஆலிஸ் " இந்தப் பூனை ஏன் சிரித்துக் கொண்டே இருக்கிறது? " என்று கேட்டாள். அதற்கு டச்சஸ் "இது ஒரு செஷையர் பூனை" என்று கூறினார். அப்போது திடீரென்று அந்த சமையல்காரி அங்கிருந்த பொருட்களை தூக்கி எறிந்து டச்சஸ் மற்றும் குழந்தையை தாக்கத் தொடங்கினாள். அப்போது டச்சஸ் தன் வைத்திருந்த குழந்தையை ஆலிஸ் இடம் தூக்கி எறிந்துவிட்டு ராணியுடன் குரோகெட் விளையாட சென்றுவிட்டாள்.


ஆலிஸ், அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள். அந்தக் குழந்தையை ஆலிஸ் உற்றுப் பார்க்கிறாள். அப்போதுதான் தெரியவந்தது அது குழந்தை அல்ல என்று. அது ஒரு "பன்றி". அதனை கீழே இறக்கிவிட்டாள். அப்போது மறுபடியும் அந்த சிரிக்கும் பூனை தோன்றியது. ஆலிஸ் அந்தப் பூனை இடம், "நான் இப்போது எங்கு செல்வேன்?" என்று கேட்டது. அதற்கு அந்த சிரிக்கும் பூனை, "மேட் ஹேட்டர் மற்றும் மார்ச் ஹேர் இருக்கும் இடத்திற்கு செல்" கூறிக்கொண்டு அந்தப் பூனை அங்கிருந்து மறைந்தது. ஆலிஸும் அவர்களைத் தேடி நடந்து சென்றாள்.

குறிப்பு: 

 குரோகெட் விளையாட்டு என்பது புல்வெளியில் விளையாடப்படும் மர பந்தாட்டம் ஆகும்.

A Mad Tea Party

மரத்தடியில் அமைக்கப்பட்டிருந்த உணவருந்தும் பெரிய மேஜையில் மேட் ஹாட்டர், மார்ச் ஹேர் மற்றும் ஒரு எலி  ஒரு பக்கம்  அமர்ந்திருப்பதை ஆலிஸ் பார்த்தாள். மேட் ஹாட்டர் மற்றும் மார்ச் ஹேர் தேனீர் அருந்திக் கொண்டிருந்தனர். அந்த எலி உறங்கிக் கொண்டிருந்தது. 

ஆலிஸ் அங்கு வந்ததும், "உனக்கு இங்கு இடம் இல்லை! உனக்கு இங்கு இடம் இல்லை! " என்று மேட் ஹாட்டர் மற்றும் மார்ச் ஹேர் கூறினர். 

அதற்கு ஆலிஸ், "இவ்வளவு பெரிய மேஜையில் எனக்கு இடம் இல்லையா?" என்று கோபத்துடன் கூறி மேஜையின் எதிர்ப்பக்கத்தில்  அமர்ந்தாள். 

மார்ச் ஹேர், "பழச்சாறு சாப்பிட வேண்டுமா?" என்று கேட்டார்.

ஆலிஸ் அந்த மேஜையில் தேடிவிட்டு, "இங்கு பழச்சாறு இல்லையே" என்று கூறினாள்.

அதற்கு மார்ச் ஹேர், "உன்னை இந்த தேநீர் விருந்துக்கு அழைக்கவே இல்லை. பிறகு எதற்கு நீ இங்கு வந்தாய்?" என்று அவமதித்தார். 

உடனே மேட் ஹாட்டர், இருவரின் உரையாடலினுள் நுழைந்தார்.

மேட் ஹாட்டர், ஆலிஸிடம் "ஒரு அண்டங்காக்கையை மேசையை போல எப்படி பயன்படுத்துவது?" என்று ஒரு முட்டாள்தனமான கேள்வியை கேட்டார்.

அதற்கு ஆலிஸ், "எனக்கு பதில் தெரியவில்லை" என்று கூறினாள்.

பின்பு ஆலிஸ் மேட் ஹாட்டரிடம் பதில் கேட்டாள். அதற்கு மேட் ஹாட்டர், "எனக்கும் தெரியவில்லை" என்று கூறினார். இதைக் கேட்ட ஆலிஸுக்கு கோபம் வந்தது. 

"பதில் தெரியாத புதிர்களை என்னிடம் கேட்டு என் நேரத்தை வீணாக்காதீர்கள்" என்று கோபத்துடன் ஆலிஸ் கூறி அந்த இடத்தைவட்டு வெளியே காட்டிற்குள் மறுபடியும் சென்றாள். 

காட்டிற்குள் நடந்து வரும்போது ஒரு பெரிய மரத்தை பார்த்தாள். அந்த மரத்தில் ஒரு சிறிய கதவு இருந்தது. அந்த கதவின் உள்ளே என்ன இருக்கும் என்று ஆர்வத்துடன் இருந்தாள்.  கம்பளிப்பூச்சி கொடுத்த காளானை சாப்பிட்டு அவள் உருவத்தை சிறியதாக்கி கொண்டாள். அந்தக் கதவை திறந்து பார்த்தாள். ஒரு அழகான தோட்டம் இருந்தது.

The Climax

ஆலிஸ் அந்த அழகான பூந்தோட்டத்தில் நடந்து வருகிறாள். அப்போது 3 தோட்டக்காரர்களை சந்திக்கிறாள். அவர்கள் உயிருடன் இருக்கும் விளையாட்டு சீட்டுக்கட்டுகள் போல இருந்தர். அந்த தோட்டத்தில் இருக்கும் வெள்ளை ராஜாக்களின் மேல் சிவப்பு நிற சாயத்தை பூசிக் கொண்டு இருந்தனர். அவ்வாறு ஏன் செய்தார்கள் என்றால், இதயங்களின் ராணிக்கு வெள்ளை நிறம் பிடிக்காது. அதனால் அவர்கள் சிவப்பு நிற சாயத்தைப் பூசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது இதயங்களின் ராணி வீரர்கள் மற்றும் விருந்தினர்களுடன் அங்கு வந்தாள். அந்த வெள்ளை முயலும் வந்தது. அவர்கள் அனைவரும் குரோகெட் விளையாட தயார் செய்து கொண்டிருந்தனர். குரோகேட் விளையாட முள்ளம் பன்றிகளை பந்துகள் ஆகவும், ஃபிளமிங்கோ பறவைகளை பந்துகளை அடிக்கும் மட்டை ஆகவும், வீரர்களை வளையம் ஆகவும் பயன்படுத்தினர். 

விளையாடி முடித்தவுடன் அங்கிருந்து ராணி மற்றும் அவர் விருந்தாளிகள் கோட்டைக்கு திரும்பினர். அப்போது ராணி தனக்கு மிகவும் பிடித்த புளிப்பு மிட்டாய்களை சுவைக்க சமையலறைக்கு சென்று பார்த்தாள், ஆனால் அந்த புளிப்பு மிட்டாய்கள் அங்கு இல்லை. யாரோ திருடி விட்டார்கள். ராணி மிகவும் கோபமடைந்தார். 


ஆலிஸ்தான் அந்த புளிப்பு மிட்டாயை திருடி இருப்பாளோ என்று நினைத்து ராணி சந்தேகிக்கிறாள். விசாரணையை தொடங்க ஆரம்பிக்கிறாள். அந்தப் பூந்தோட்டத்தில் இருந்த அனைத்து விலங்குகளும் அந்த விசாரணைக்கு வருகின்றது. மேட் ஹாட்டர், மார்ச் ஹே, சிரிக்கும் பூனை ஆகியோரும் அந்த விசாரணைக்கு வந்தடைந்தனர்.

விசாரணைத் தொடங்க ஆரம்பித்தது. ராஜா மற்றும் ராணி அவர்களின் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

ராஜா, "முதல் சாட்சியை அழைக்கவும்" என்றார். 

மேட் ஹாட்டர், வந்தார். விசாரித்து முடித்தவுடன் "அவர் ஒரு அப்பாவி. அவர் திருடவில்லை" என்று கூறி அவர் நிரபராதி என்றார் ராஜா. 

அடுத்த சாட்சியாக ஆலிஸை அழைத்தனர். அவளை விசாரிக்கத் தொடங்கிய போது, அவள் திடீரென்று வேகமாக வளர்ந்தாள். " எனக்கு எதுவும் தெரியாது" என்று கூறினாள்.

அப்போது ராணி, "வீரர்களே, இவள் தலையைத் துண்டித்து விடுங்கள்" என்று உத்தரவிட்டார். ஆலிஸ் கத்த ஆரம்பித்தாள். அந்த விளையாட்டு சீட்டுக் கட்டுகள் ஆலிஸின் தலைமீது ஈக்கள் போல மேய்ந்தனர். அவளை தாக்கத் தொடங்கினர். 

" ஆலிஸ்! ஆலிஸ்! " என்று ஒரு குரல் கேட்டது. அது அவளது சகோதரியின் குரல். அப்போதுதான் தெரியவந்தது, அது ஒரு கனவு என்று. அவள் தனது கனவில் நடந்த விசித்திரமான சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறாள். ஆலிஸ்ஸும் அவள் சகோதரியும் வீடு திரும்பினார்.

Comments

Popular posts from this blog

இளமையில் கல்

The Selfish Giant - Story in Tamil