The Selfish Giant - Story in Tamil

TAMIL STORIES FOR KIDS (Bedtime stories)

The Selfish Giant story in Tamil.

சுயநல அரக்கன் 

 The Selfish giant என்னும் கதையை ஆஸ்கர் வைல்ட் ( Oscar Wilde ) எழுதியுள்ளார். இவர் அயர்லாந்தை சேர்ந்த ஒரு எழுத்தாளர். 



ஒரு கிராமத்தில் அழகான பூந்தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் ஒரு கொடிய அரக்கன் வாழ்ந்து வந்தான். அந்த தோட்டத்தில் அழகழகான மலர்களும் கனிகளும் பூத்துக் குலுங்கின. ஒவ்வொரு மதியமும் அந்த தோட்டத்தில் பள்ளி குழந்தைகள் விளையாட வருவார்கள். அந்த அரக்கன் தனது நண்பன் கார்னிஷ் ஆக்ரே ( Cornish Ogre) என்பவரை சந்திக்க அவன் வீட்டிற்கு சென்று இருந்தான். ஏழு வருடங்களுக்கு பிறகு அவன் மறுபடியும் தனது தோட்டத்திற்கு வந்தான். அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை அச்சுறுத்தினார். 


"இந்த தோட்டத்தில் நீங்கள் யாரும் விளையாட கூடாது" என்று பயமுறுத்தினார். மேலும் அந்த தோட்டத்தை சுற்றி ஒரு பெரிய மதில் சுவற்றை எழுப்பினார். அந்த தோட்டத்தின் வாயிலில் ஒரு அறிவிப்பு பலகையும் வைத்தான். அதில்  "இந்த தோட்டத்தில் அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்ற வாசகத்தை எழுதினான். இதை பார்த்தவுடன் அந்த குழந்தைகள் கவலை அடைந்தனர்.


சில நாட்களுக்குப் பிறகு வசந்த காலம் வந்தது, ஆனால் அந்த அரக்கன் தோட்டத்தில் மற்றும் குளிர் காலமாகவே இருந்தது. அந்த ஊரில் அனைத்து இடங்களிலும் பச்சை பசேலென்று செழுமையாக இருந்தது. ஆனால் அந்த அரக்கன் தோட்டத்தில் மட்டும் மரங்களும் செடிகளும் பனிகளால் மூடப்பட்டிருந்தன. அந்த அரக்கனுக்கு எதுவும் புரியவில்லை.  ஏனென்றால் அந்த அரக்கன் மிகவும் சுயநலமாக இருந்ததால், அந்த தோட்டத்தில் இலையுதிர் காலம் கூட வர மறுத்து விட்டது.


ஒரு நாள் அந்த சிறுவர்கள் அந்த சுவற்றின் ஒரு சிறிய துளை வழியாக அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் விளையாடிக்கொண்டிருந்த இடத்தில் மட்டும் பழங்களும் பூக்களும் பூத்து பசுமையாக இருந்தது. அந்தச் செடிகளில் பறவைகள் பாடி மகிழ்ந்தனர். அந்த அரக்கன், "என்ன ஒரே சத்தமாக இருக்கிறது" என்று கண் விழித்து கொண்டு, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தான்.


உடனே அந்த இடத்திற்கு சத்தம் போட்டுக் கொண்டே வந்தது. எல்லா சிறுவர்களும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். ஒரே ஒரு சிறுவன் மட்டும் அழுது கொண்டே, "என்னை கொன்றுவிடாதீர்கள்!" என்று அச்சப்பட்டு கூறினான். "கவலைப்படாதே! நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன்" என்று அந்த அரக்கன் கூறியது. 


"நான் இந்த மரத்தின் கிளை மீது ஏற எனக்கு உதவி செய்வீர்களா?" என்று அச்சிறுவன் கேட்டான். அதற்கு அந்த அரக்கன், "ஓ! கண்டிப்பாக" என்று கூறி அந்த அரக்கன் அச்சிறுவனுக்கு உதவி செய்தது. மகிழ்ச்சியடைந்த சிறுவன் அந்த அரக்கனுக்கு முத்தமிட்டான். உடனே அந்த அரக்கன் மிகவும் சந்தோஷப்பட்டான். அந்த தோட்டத்தில் அனைத்து குழந்தைகளையும் விளையாட அனுமதித்தான். இதைக் கேட்ட அந்த குழந்தைகள் மிகவும் சந்தோஷம் அடைந்தனர். சில நாட்களுக்கு பிறகு அந்த தோட்டம் பசுமையாக காணப்பட்டது.


காலங்கள் கடந்தன. அந்த அரக்கன் மிகவும் முதிர்ந்து போய் விட்டான். அவனால் அந்த முத்தமிட்ட சிறுவனை மறக்க முடியவில்லை. ஒருநாள் அந்த அரக்கன், காயமுற்ற நிலையில் அச்சிறுவனை சந்திக்கிறான். "உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது யார்? அவனை நான் கொலை செய்து விடுகிறேன்" என்று கோபத்துடன் அந்த அரக்கன் கூறினான். அதற்கு அச்சிறுவன், "இது அன்பினால் ஏற்பட்ட காயங்கள்" என்று புன்னகையுடன் கூறினான். 



நீதி:  உண்மையான அன்பும் சுயநலமில்லாத குணமும் மகிழ்ச்சியைத் தரும்.

Comments

Popular posts from this blog

இளமையில் கல்